புழலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த இருவர் கைது

சென்னை அருகே புழலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த இருவர் கைது
சென்னை அருகே புழலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த இருவர் கைது . திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்பசாமி நகரில் திருமணம் ஆன 27 வயது பெண் கணவருடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் காளியப்பன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் அந்த பெண்ணிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பற்றி அவரது கணவரிடம் அந்த பெண் சொல்லவே உடனே அவர் அந்த நபர்களின் வீட்டிற்கு போய் கேட்டதில் அவர்கள் இனிமேல் இந்த தவறான செயல்களில் ஈடுபட மாட்டோம் எனச் சொல்லியதின் பேரில் அவர் சென்று விட்டார். நேற்று முன்தினம் மறுபடியும் மீண்டும் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு காளியப்பனும் , வெற்றிவேலும் சென்று தொட்டு பேசி ஆசைக்கு இணங்குமாறு மிரட்டி உள்ளனர். பயந்து அலறிய அந்த பெண் சத்தம் போடவே இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர் .இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் புழல் காவல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கண்ணப்ப சாமி நகர், ஏழாவது தெருவை சேர்ந்த காளியப்பன் (வயது 38) வெற்றிவேல் (வயது 32) ஆகிய இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் உண்மை அம்பலமானது . இதுகுறித்து புழல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் இருவர் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
Next Story