அய்யர்மலை அரசு கலைக் கல்லூரியில் உயர்வுக்கு படி நிகழ்ச்சி

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் சிறப்புரை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் கலந்து கொண்டு நான் முதல்வன் திட்டம் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதில் கல்லூரி முதல்வர், பல்வேறு துறை பேராசிரியர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story