ராகுல்காந்திக்கு எச்ராஜா கொலை மிரட்டல்:காவல் துறையில் புகார்

ராகுல்காந்திக்கு எச்ராஜா கொலை மிரட்டல்:காவல் துறையில் புகார்
ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் மனு அளித்தனர். 
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்பியை  தேசத் துரோகி என்று அவதூறாக பேசிய பாஜக நிர்வாகி எச்.ராஜா மீது தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள காவல் நிலையங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ உத்தரவிட்டார்.  அதனைத் தொடர்ந்து இன்று தூத்துக்குடி  தென்பாகம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் முருகனை சந்தித்து, மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி எச்.ராஜா, உ.பி. மாநில அமைச்சர் ரகுராஜ் சிங், ரயில்வே இணை அமைச்சர் ரவினித்பிட்டு, பாஜக தலைவர் தர்விந்தர் சிங் மர்வா, சஞ்சய் கேய்க்வாட்டின் ஆகியோர் 5 பேர் மீது புகார்கள் மற்றும் அவர்கள் பேசிய அவதூறான வார்த்தைகளை உள்ளடக்கிய சிடிகளை அளித்து புகார் மனு அளித்தனர். இதில். மண்டல தலைவர்கள் ராஜன், சின்னகாளை, மாவட்டத் துணைத் தலைவர்கள் டேவிட் வசந்தகுமார், பிரபாகரன்,  முன்னாள் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி முத்துவிஜயா, மாநகரச் செயலாளர் முத்துராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Next Story