பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்தவும் போனஸ் உச்சவரம்பை நீக்கவும்

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிஆர்இயு ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்*
மதுரை ரயில் நிலையம் மேற்கு நுழைவாயில் அருகே டி ஆர் இ யூ மதுரை கோட்டம் சார்பாக கோட்டத் தலைவர் ராஜு தலைமையில் கோட்ட செயலாளர் ஆன்ட்ரன் முன்னிலையில் ரயில்வே தொழிலாளர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் போன உச்சவரமை நீக்க வேண்டும் என்பிஎஸ் யூபிஎஸ்ஐ ரத்து செய்ய வேண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எட்டாவது ஊதிய குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் காலியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் ரயில்வே பணிகளை ஒப்பந்த பணியாக மாற்றக்கூடாது தனியார் மையத்தை கைவிட வேண்டும் இ-பாசை பயணச் சீட்டாக அங்கீகரிக்க வேண்டும் மாற்றுத்திறனாளி ரயில்வே ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் பதவி உயர்வு வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பிய படி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் லெனின் அகில இந்திய நிலை அதிகாரிகள் சங்கம் கோட்ட உதவி தலைவர் விஜய ராஜா கோட்டை இணைச்செயலாளர் சங்கரநாராயணன் துணை பொதுச்செயலாளர் சிவக்குமார் உட்பட டி ஆர் இ யு தொழிலாளர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Next Story