கரூரில்,கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.

கரூரில்,கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
கரூரில்,கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். கரூரில் கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தள்ளுபடி விலையில் சேலை மற்றும் சட்டை வாங்கி விற்பனையை துவக்கி வைத்தார். இந்தியாவில் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் ஆப் டெக்ஸ் நிறுவனம் 1935 முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து 89- ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு கைத்தறி நெசவாளர் முன்னேற்றத்திற்கு உதவும் வகையிலும் தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்குவதற்காகவும் விழாக்காலங்களில் 30 சதவீதம் வரை அரசு சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். முதலில் தனது குடும்பத்திற்கு சேலை ரூ. 9,510- மற்றும் சட்டை ரூ. 770என மொத்தம் 10,280 ரூபாய் மதிப்பு உள்ள ஜவுளிகளை தேர்வு செய்தார். இதில் சேலைக்கு 30% சட்டைக்கு 20% தள்ளுபடி போக ரூ.7,637-ஐ மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஏடிஎம் கார்டு மூலம் செலுத்தி விற்பனையை தொடங்கி வைத்தார். மேலும், புதிய வடிவமைப்புகளில் அசல் பட்டுடன் கூடிய சேலம் பட்டுப்புடவைகள், புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், ஏராளமாக குவிந்துள்ளன. மேலும்,கோவை, மதுரை, பரமக்குடி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து ரக காட்டன் புடவைகள் புதிய வடிவிலும், ஆர்கானிக் மற்றும் களம் காரி காட்டன் புடவைகள் குறைந்த விலையில் நேர்த்தியான வண்ணங்களில் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூபாய் 60 லட்சம் விற்பனை செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த தீபாவளி சிறப்பு விற்பனையாக, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு வட்டி இல்லா கடன் வசதியில் 30 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story