ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பேன் எனக் கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சி சார்பில் மனு.

ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பேன் எனக் கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சி சார்பில் மனு.
ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பேன் எனக் கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சி சார்பில் மனு. கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவரும், தேசிய கிசான் காங்கிரஸ் ஒருங்கிணைப் பாலருமான பேங்க் சுப்பிரமணியன் தலைமையில், கரூர் மாவட்ட எஸ்பி அவர்களிடம்,ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பேன் என்றும், உங்கள் பாட்டி இந்திரா காந்திக்கு ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கும் ஏற்படும் என்றும், தேச துரோகி என்றும் கீழ்த்தரமாக கொலை குற்ற உணர்வோடு பேசிய மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்நீத் பிட்டு, U.P.அமைச்சர்ரகுராஜ் சிங்,சிவசேனா எம் எல் ஏ சஞ்சய் சிங் கேக் வாக், தமிழ்நாடு பாஜக பொறுப்புத் தலைவர் எச் ராஜா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கரூர் மாவட்ட எஸ்பி பெரோஸ் கான் அப்துல்லா-விடம் புகார் மனு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் சின்னையன், நாகேஸ்வரன், எஸ் சி எஸ் டி மாவட்டத் தலைவர் முனீஸ்வரன், ஆராய்ச்சி துறை தலைவர் போட்டோ பாலு,ஆர் டி ஐ மாநில பொதுச் செயலாளர் மனோகரன், மாவட்ட செயலாளர் சேகர் ஒரு லிட்டர் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story