திருப்பூரில் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை!

திருப்பூரில் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை!
திருப்பூரில் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பேர் தற்கொலை! இது குறித்து வடக்கு காவல் நிலைய போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்: குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை. ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த நாக சுரேஷ் 40 என்பவர் திருப்பூர் ஊத்துக்குளி சாலை அணைக்காடு பகுதியில் வாடகை வீட்டில் தங்கி டீக்கடை வைத்து நடத்தி வருகிறார் இவருடன் இவரது மனைவி விஜி மற்றும் 9 வயது பெண் குழந்தை முத்தீஸ்வரி என குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக டீக்கடை திறக்கப்படாமல் இருந்த நிலையில் இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வெளியேறியதை கண்ட அக்கம் பக்கத்தினர் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த போலீசார் உள் பக்கம் தாழிட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது இதனை தொடர்ந்து உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story