பல்லடம் அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த நபர் கைது.

பல்லடம் அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த நபர் கைது.
110 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து பல்லடம் போலீசார் நடவடிக்கை.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக பல்லடம் போலீசாருக்கி தகவல் கிடைத்தது.தகவலின் அடிப்படையில் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது கணபதிபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மது பாட்டில்கள் வாங்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 110 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த பல்லடம் போலீசார், மது பாட்டில்களை வாங்கி வைத்திருந்த ஆனந்தராஜ் என்பவரை கைது செய்தனர்.
Next Story