குடியிருப்புப் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம்
பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட ப.வடுகபாளையம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.வடுகபாளையத்தில் இருந்து சித்தம்பலம் செல்லும் சாலையில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள சாக்கடைகளில் கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்லடம் நகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story