படுத்த படுக்கையான மனைவியை கழுத்தறுத்து கொன்ற முதியவர்
Nagercoil King 24x7 |24 Sep 2024 2:32 PM GMT
இரணியல் அருகே
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்தவர் சந்திரபோஸ் (83) பனையேற்று தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (75). இந்த தம்பதிக்கு 3 மகன்களும் 3 மகள்களும் என 6பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. என் தற்போது வயது முதிர்ந்த தாய் தந்தை தாய் தந்தையரை மகன்கள் பராமரித்து வந்தனர். சந்திரபோஸ் கண்பார்வை குறைந்தது. லட்சுமி கடந்த மூன்று ஆண்டுகளாக படுத்த படுக்கையாகிவிட்டார். இதனால் லட்சுமிக்கு முதுகு பின்னால் புண் ஏற்பட்டு, அழுகி புழுக்கள் நெளிய தொடங்கின. இதனால் வலியும் வேதனையும் அதிகரித்தது. இதையடுத்து கண்பார்வை சரி இல்லாத நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் சந்திரபோஸ் நிலைகுலைந்தார். இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் சந்திரபோஸ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லட்சுமியின் கழுத்தை அறுத்துவிட்டு கதறி அழுதார். லட்சுமி படுத்த படுக்கையிலே உயிரிழந்தார். சந்திர போஸும் தற்கொலைக்கு முயன்றார். சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மகன்கள் தாயார் இறந்ததை கண்டனர். உயிர்க்கு போராடிய தந்தை சந்திரபோசை உடனடியாக குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story