ராசிபுரம் அருகே பள்ளி சிருடைவுடன் மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை..
Rasipuram King 24x7 |24 Sep 2024 2:33 PM GMT
ராசிபுரம் அருகே பள்ளி சிருடைவுடன் மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வையப்பமலை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(39) விவசாயம் செய்து வரும் நிலையில் கேசவவர்ஷினி(15) என்ற மகள் உள்ளர். மாணவி வையப்பமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் பள்ளி முடித்துவிட்டு மாணவி வீட்டிற்கு வந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் கதவை பூட்டிவிட்டு பள்ளி சீருடைவுடன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் தாயார் வீட்டை திறக்கும் முயன்ற போது கதவு திறக்காத நிலையில் உறவினர்கள் உதவியுடன் வீட்டின் மேற்கூறையை உடைத்து பார்த்த போது மாணவி தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் உறவினர்கள் உதவி உடன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்க மருத்துவர்கள் பரிசோதித்த போது மாணவி ஏற்கனவே இறந்ததாக தெரிவித்ததை அடுத்து மாணவி உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக எலச்சிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்கள் யாரேனும் திட்டினார்களா அல்லது வேறு ஏதாவது காரணங்களா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
Next Story