வங்கி ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை!

வங்கி ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை!
தூத்துக்குடியில் தனியார் வங்கி ஊழியர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
தூத்துக்குடி டூவிபுரம் 5-ஆவது தெருவைச் சேர்ந்த விவேகானந்தன் மகன் தெய்வ மணிகண்டன் (28). தனியார் வங்கி ஊழியரான இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றாராம். பின்னர் அவர் நேற்று காலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள், ரூ.ஆயிரம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், மத்தியபாகம் போலீசார் திருட்டு நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story