மனைவி பிரசவத்துக்கு சென்ற நிலையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
Nagercoil King 24x7 |24 Sep 2024 5:01 PM GMT
தக்கலை அருகே
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கீழ கல்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (36) தொழிலாளி. இவருக்கும் ஜெயஸ்ரீ என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ஜெயஸ்ரீ 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் பிரசவத்துக்காக தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கிடையே இன்று (24-ம் தேதி) காலை ஜெயஸ்ரீ தனது கணவர் சுரேஷ் க்கு போன் செய்துள்ளார். அவர் போன் எடுக்கவில்லை. இதையடுத்து பக்கத்து வீட்டிற்கு போன் செய்து விபரத்தை கூறியுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் சென்று சுரேஸ் வீட்டு கதவை தட்டியும் கதவு திறக்கவில்லை. உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுரேஷ் மின் விசிறியில் தூக்கில் தொங்கும் நிலையில் காணப்பட்டார். இது குறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story