மங்கலம்பேட்டை, விஜயமாநகரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

மங்கலம்பேட்டை, விஜயமாநகரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
செயற்பொறியாளர் தகவல்
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கோட்டம் எம்.பரூர் துணை மின் நிலையத்தில் நாளை 26ந் தேதி வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால்  காலை 09.00 மணி முதல் 02.00 வரை முகாசப்பரூர், எம்.பட்டி, கோணாங்குப்பம், ரெட்டிகுப்பம், தொட்டிக்குப்பம், சின்னப்பரூர், விஜயமாநகரம், காட்டுப்பரூர், எடசித்தூர், மு. புதூர், வலசை மற்றும் பிஞ்சனூர், இளங்கியனூர், சிறுவம்பார், டி. மாவிடந்தல், மு. அகரம் உள்ளிட்ட கிராமங்களில்  மின்நிறுத்தம் செய்யப்படும். இதே போல விருத்தாசலம் கோட்டத்திற்கு உட்பட்ட கோ.பூவனூர் துணைமின் நிலையத்தில் நாளை  26 ந் தேதி வியாழகிழமை அன்று மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்னோட்டம் வழங்கப்பெறும் மங்கலம்பேட்டை, கர்ணத்தம', பள்ளிபட்டு, சமத்துவபுரம், ஆர்.பி. நல்லூர், கோ.பூவனூர், விஜயமாநகரம், சின்னவடவாடி பெரியவடவாடி, மாத்தூர், பவழங்குடி, மணக்கொல்லை, பாலக்கொல்லை, ஆலடி,எடக்குப்பம்,சித்தேரிக்குப்பம்,முத்தனங்குப்பம்,குருவன்குப்பம்,இராமநாதபுரம், புலியூர், கலர்க்குப்பம் மற்றும் நடியப்பட்டு உள்ளிட்ட கிராமப் பகுதிகளுக்கு அன்று காலை 9.00 மணி மதியம் 2.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு விருத்தாசலம் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுகன்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story