லாரி மோதி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் உயிரிழப்பு
Nagercoil King 24x7 |25 Sep 2024 3:50 AM GMT
குளச்சலில்
குமரி மாவட்டம் குளச்சல் அருகே பனவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் சேகர் மகன் அஸ்வத் (19). இவர் வெள்ளமோடியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அஸ்வத் புதிதாக ஒரு பைக் வாங்கி உள்ளார். இந்த பைக்கின் தவணைத் தொகையை செலுத்துவதற்காக கல்லூரி முடிந்து இரவு முட்டம் துறைமுகத்தில் ஐஸ் லோடு ஏற்ற செல்வது வழக்கம். இவருடன் நண்பர் கீழத்தெருவை சேர்ந்த சிராஜுதீன் என்பவரும் செல்வார். நேற்று முன்தினம் ( 23-ம் தேதி) வழக்கம் போல் கல்லூரி முடிந்து அஸ்வத் வீட்டிற்கு வந்த வின்னர் பாடங்கள் படித்த பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் நண்பர் சிராஜுடன் முட்டம் துறைமுகத்திற்கு புறப்பட்டனர். வைகை அஸ்வத் ஓட்டினார். குளச்சல் பள்ளி மூக்கு சந்திப்பை கடந்து செல்லும்போது எதிரே வந்த லாரி ஒன்று பைக்கில் மோதியது. இதில் அஸ்வத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிராஜுதீன் படுகாயம் அடைந்தார். தகவலின் பேரில் குளச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிராஜுதீனை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அஸ்வத் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. விபத்து ஏற்படுத்திய டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story