பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் சேலையால் தூக்கிட்டு தற்கொலை
Dharapuram King 24x7 |25 Sep 2024 4:30 AM GMT
பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் சேலையால் தூக்கிட்டு தற்கொலை
பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் சேலையால் தூக்கிட்டு தற்கொலை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜா இவரது மகன் நித்திஷ் குமார் இவர் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள என் சி பி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை கிருஷ்ணராஜா சுல்தானியா பள்ளிவாசல் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நித்திஷ் குமார் பள்ளிக்குச் சென்று விட்டு பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பி வீட்டிற்கு வந்த பின்னர் டியூசன் சென்று படித்து வருகிறார். மளிகை கடை வைத்துள்ள நிதிஷ்குமாரின் தந்தை கிருஷ்ணராஜா மற்றும் இவரது மனைவி இருவரும் மளிகை கடைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் நித்திஷ்குமார் டியூசன் முடிந்து வீட்டிற்கு வந்தபோது மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. மன உளைச்சலில் இருந்த நித்திஷ் குமார் வீட்டில் இருந்த சேலையில் தூக்கு மாட்டி நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்து கொண்டான். இரவு 9 மணி அளவில் மளிகை கடையில் இருந்து வீட்டிற்கு சென்ற பெற்றோர்கள் வீட்டை திறந்து பார்த்த போது நித்திஷ்குமார் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். அப்போது பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தாராபுரம் காவல் ஆய்வாளர் விஜயசாரதி வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மாரியம்மன் கோவில் தெருவில் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story