தமிழர் தேசம் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம்

20 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு
கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் பகுதியில் தமிழர் தேசம் கட்சி நிறுவனர் செல்வக்குமார் வீட்டை சோதனை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சாலை மறியல் போராட்டம் செய்துள்ளனர். அதனை அடுத்து தமிழர் தேசம் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் அருள்ராஜ், குளித்தலை தொகுதி பொறுப்பாளர் பிரசாந்த், கடவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன், கிழக்கு மாவட்ட துணை செயலாளர் விஜய், மாநில செய்தி தொடர்பாளர் ராஜா உள்ளிட்ட 20 பேர் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story