பண்ணையார் நினைவு தினம் : மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!

பண்ணையார் நினைவு தினம் : மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 26ஆம் தேதி சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் ஆகிய வட்டங்களில் உள்ள 11 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 26ஆம் தேதி சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் ஆகிய வட்டங்களில் உள்ள 11 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட அறிவிப்பில், "தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் அம்மன்புரம் கிராமத்தில் 26.09.2024 அன்று வெங்கடேஷ் பண்ணையார் 21-வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலிருந்தும் பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொள்வதாலும் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை 26.09.2024 அன்று மூடுவதற்கு ஆவன செய்யும்படி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டுள்ளார். இது தொடர்பாக வரப்பெற்ற கடிதத்தில் 26.09.2024 அன்று சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் ஆகிய வட்டங்களில் அமைந்துள்ள 11 அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மட்டும் அடைத்திட தூத்துக்குடி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பரிந்துரை செய்துள்ளார். எனவே, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஆகியோரின் அறிக்கையை ஏற்றும் 26.09.2024 அன்று ஒரு நாள் மட்டும் சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் ஆகிய வட்டங்களில் உள்ள 11 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவதற்கு இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
Next Story