திருமாநிலையூர் அமரர் ஊர்தி மீது டூவீலரில் மோதிய முதியவர் படுகாயம்.

திருமாநிலையூர் அமரர் ஊர்தி மீது டூவீலரில் மோதிய முதியவர் படுகாயம்.
திருமாநிலையூர் அமரர் ஊர்தி மீது டூவீலரில் மோதிய முதியவர் படுகாயம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமா நிலையூர் பகுதியில், நேற்று மாலை 5 மணி அளவில், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் நிறுவனத்திற்கு தமிழக அரசை சேர்ந்த அமரர் ஊர்தி எரிபொருள் நிரப்ப திருச்சி- கரூர் சாலையிலிருந்து பெட்ரோல் பங்கை நோக்கி திருப்பப்பட்டபோது, அதே சாலையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகில் உள்ள பழைய ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு முதியவர், டூவீலரில் வேகமாக சென்று பெட்ரோல் பங்கிற்கு நுழைய முயன்ற அமரர் உறுதி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் முதியவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது, அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் இவரை மீட்டு அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தினர். பிறகு அவரிடம் நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டபோது, முதியவர் தனக்கு நினைவில்லை என கூறினார். உடனே காவல்துறையினர் அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
Next Story