கண் தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த மராத்தாந் மற்றும் வாக்கத்தான்

கண் தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த மராத்தாந் மற்றும் வாக்கத்தான்
அனைவரும் பங்கேற்க அழைப்பு
பல்லடம் ரெயின்போ ரோட்டரி மற்றும் பல்லடம் நகராட்சி இணைந்து கண் தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடத்தும் பார்வை 2.4 மராத்தான் மற்றும் வாக்கத்தான் வரும் அக்டோபர் 20 ம் தேதி நடைபெற உள்ளது.அதனை முன்னிட்டு பல்லடம் அரசு பெண்கள் மேல் நிலை பள்ளி முன்பு சோதனை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பல்லடம் நகர திமுக செயலாளர் ராஜேந்திரகுமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். அக்டோபர் 20 ல் அனைவரும் பங்கு பெற பல்லடம் ரெயின்போ ரோட்டரி மற்றும் பல்லடம் நகராட்சி சார்பாக கேட்டு கொள்ளப்பட்டது.
Next Story