வியாபாரம் பாதிப்பு வணிக வியாபாரிகள் காவல் நிலையத்தில் புகார்

வியாபாரம் பாதிப்பு வணிக வியாபாரிகள் காவல் நிலையத்தில் புகார்

வியாபாரம் பாதிப்பு வணிக வியாபாரிகள் காவல் நிலையத்தில் புகார்

உத்திரமேரூரில் தரமற்ற ஜவுளி பொருட்களை குறைந்த விலைக்கு வெளியூர் வியாபாரிகள் விற்பனை செய்வதால் உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் இடம் வாய்மொழி வார்த்தையாக 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் புகார் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வணிக கடைகள் செயல்பட்டு வருகிறது.





அப்பகுதியில் கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் பலர், கொரோனா நோய் தொற்று கால கட்டத்தில் தொழில் நலிவு அடைந்ததில் இருந்து கடைக்கு வாடகை, வேலை ஆட்களுக்கு சம்பளம், மின் கட்டணம், ஜிஎஸ்டி வரி முறையாக கட்டுதல் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு சிரமங்களுக்கு இடையே கடை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக உத்திரமேரூர் பகுதியில் வெளியூர் வியாபாரிகள் சிலர் அரசுக்கு முறையாக ஜிஎஸ்டி வரி எதுவும் செலுத்தாமல் தனியார் மண்டபம் மற்றும் தனியார் கடைகளை மாத கணக்கில் வாடகை எடுத்து தரமற்ற ஜவுளி துணிகள் மற்றும் பொருட்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் முறையாக அரசுக்கு வரி செலுத்தி கடை நடத்துபவர்கள் வியாபாரம் இல்லாமல் அவதி அடைந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், உத்திரமேரூர் காவல் நிலையத்திற்கு உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வணிக வியாபாரிகள் வந்து வெளியூர் வியாபாரிகளால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காவல் ஆய்வாளர் பரந்தாமன் அவர்களிடம் வாய்மொழி வார்த்தையாக தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டனர்.

Next Story