இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் பொதுக்கூட்டம்

இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் பொதுக்கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் பொதுக்கூட்டம் விஸ்வகர்மா மஹாலில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் பயிற்சி வகுப்புகள் திண்டுக்கல் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள விஸ்வகர்மா மஹாலில் நடைபெற்றது. இதில் கட்டுமான நலவாரியம், இந்திய அஞ்சலக வங்கி, இ-சேவை சம்பந்தப்பட்ட பயிற்சிகள் நலச்சங்கத்தை சார்ந்த உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சங்க மாவட்ட தலைவர் தனராஜ், மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாவட்ட பொருளாளர் சுதாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் அனைவருக்கும் கட்டுமான நலவாரிய சான்றிதழ் வழங்கப்பட்டது.
Next Story