நாடாளுமன்ற எதிர் கட்சி தலைவர் ராகுல்காந்தியை ஆண்டி இந்தியன் என கூறிய தமிழ்நாடு பாஜக பொறுப்புக் குழு தலைவர் ஹெச் ராஜா மீது நடவடிக்கை எடுக்ககோரி காங்கிரஸ் கட்சியினர் புகார் மனு!

திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாடாளுமன்ற எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ஆண்டி இந்தியன் என கூறிய பாஜக பொறுப்புக் குழு தலைவர் ஹெச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் புகார் மனு அளித்தனர்.
திர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தேசவிரோதி ஆன்ட்டி இந்தியன் என்று பேசிய தமிழ்நாடு பாஜக பொறுப்பு குழு தலைவர் எச். ராஜா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி  மாவட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு! தமிழ்நாடு பாஜக பொறுப்பு குழு தலைவர் எச்.ராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் பேசும் பொழுது எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி ஆன்ட்டிஇந்தியன் தேச துரோகி என  பேசியுள்ளதை கண்டித்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக முறைப்படி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய ராகுல் காந்தி மீது ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தனிப்பட்ட வெறுப்பை வெளிப்படுத்தி கலவரத்தை தூண்டுவதாக எச்.ராஜா பேச்சுக்கள் உள்ளதாகவும் இதனால் பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கிலும் வெறுக்கத்தக்க கருத்துகள் மூலம் கலவரத்தை ஏற்படுத்த முயலும் தமிழக பாஜக பொறுப்பு குழு தலைவர் எச் ராஜா மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யக்கோரி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளர் கோபிநாத் பழனியப்பன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா அவர்களிடம் நேரில் புகார் மனு அளிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Next Story