கல் தடுக்கி கீழே விழுந்த அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு

கல் தடுக்கி கீழே விழுந்த அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் கல் தடுக்கி கீழே விழுந்ததில் அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்கின்றனர்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் சிறுநீர் கழிக்க சென்றதாக கூறப்படுகிறது, இதில் முதியவர் செல்லும் பொழுது புதிய கழிப்பிட கட்டிட பணிக்காக கொட்டப்பட்டிருந்த செங்கல் கற்கள் கொட்டி வைக்கப்பட்ட நிலையில் அதை கவனிக்கால் சென்ற அடையாளம் தெரியாத 47 வயது மதிக்கத்தக்க முதியவர் கால் இடறி கல்லில் அடிபட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே பலி பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மானாமதுரை போலீசார் உடலை கைப்பற்றி மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் எதற்காக இங்கே வந்தார் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story