காதலை கைவிட்ட காதலிக்கு குத்து காதலன் கைது
Nagercoil King 24x7 |25 Sep 2024 1:29 PM GMT
புதுக்கடை அருகே
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்வியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். தற்போது கொல்லங்கோடு பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பயிற்சி ஆசிரியையாக சென்று வருகிறார். மாணவிக்கும் அதே பகுதியை சேர்ந்த அருண் (36) என்ற வாலிபரும் சில வருடங்களாக காதலித்து வந்தனர். அருணுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் ஆசிரியர் பயிற்சி மாணவி காதலிப்பதை நிறுத்தியுள்ளார். இதனால் அருணுக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாணவி தனது பைக்கில் முக்காடு என்ற பகுதியில் செல்லும்போது, அருண் பைக்கை தடுத்து நிறுத்தி, கூர்மையான கண்ணாடியால் மாணவியை குத்தியுள்ளார். இதில் அவர் காயமடைந்தார். மேலும் ஆத்திரமடங்காமல் காலால் மிதித்து, கொலை மாட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த மாணவி குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து அருணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story