மது போதையில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்

மது போதையில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்
கணவனை கைது செய்து பல்லடம் போலீசார் விசாரணை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பணப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ரேவதி.இவர் தனது கணவர் குமாருடன் குடியிருந்து அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இந்த நிலையில் ரேவதியின் கணவர் குமார் தினம் தோறும் குடித்துவிட்டு ரேவதியிடம் அடிக்கடி தகராறு ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.வழக்கம் போல மது போதையில் வீட்டிற்கு வந்த கணவர் குமார் மனைவி ரேவதியிடம் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ரேவதியின் தலை தோள்பட்டை கை உள்ளிட்ட பகுதிகளில் பலமாக தாக்கி உள்ளார்.இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்த ரேவதியை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இது தகவல் தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story