காவிரி-திருமணிமுத்தாறு-பொன்னியாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்!-உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் முதல்வருக்கு வேண்டுகோள்

காவிரி-திருமணிமுத்தாறு-பொன்னியாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்!-உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் முதல்வருக்கு வேண்டுகோள்
இத்திட்டம் நிறைவேற்றினால், 1 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, அதன் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டம் பெற்று, கிணறு மற்றும் போர்வெல் கிணறுகளின் நீர் மட்டம் அதிகரிக்கும். இந்த பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் மேன்மையடையும்.
விவசாயிகளின் 60 ஆண்டு கோரிக்கையான காவிரி-திருமணிமுத்தாறு-பொன்னியாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R.வேலுசாமி, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:- சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகளின், 60 ஆண்டுகால கோரிக்கையான, காவிரி-திருமணிமுத்தாறு-பொன்னியாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டம் நிறைவேற்றினால், 1 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, அதன் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டம் பெற்று, கிணறு மற்றும் போர்வெல் கிணறுகளின் நீர் மட்டம் அதிகரிக்கும். இந்த பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் மேன்மையடையும்.தமிழக அரசின் கவனத்தில் உள்ள இந்த திட்ட மதிப்பீட்டு அறிக்கைக்கு உடனடியாக நிர்வாக அனுமதி அளித்து, திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தர்மபுரி மாவட்ட பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்கள் பாசன வசதி இல்லாமல், புன்செய் மற்றும் வறட்சி பகுதியாக மாறி உள்ளது. மேட்டூர் அணை, அதன் முழு கொள்ளளவான, 120 அடி எட்டியபிறகும், கடலில் வீணாக கலக்கும் உபரி நீரை, தர்மபுரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், நீண்டகால கோரிக்கையான வறண்ட ஏரிகளுக்கு உபரி நீர் நிரப்பும் திட்டத்தை, தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். அதேபோல், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் கடுமையான வறட்சி மாவட்டங்களாக உள்ளன. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் வானத்தை நம்பியே பயிர் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்த்தும் வகையில், மேட்டூர் அணையின் உபரிநீரை சேமிக்கும் வகையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி வட்டார பகுதிகளின் வறண்ட ஏரிகள் வழியாக, திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் குடகனாறு நீர்த்தேக்கம் மற்றும் குஜிலியம்பாறை சுற்று வட்டார பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி உபரிநீர் திட்டம் மூலம் வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப வேண்டும். முக்கியமான இந்த 3 திட்டங்களையும், தமிழக முதல்வர் உடனடியாக நிறைவேற்றி, விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story