பராமரிப்பு பணிக்காக நொய்யல் ரயில்வே கேட் இன்று முதல் மூடல்.

பராமரிப்பு பணிக்காக நொய்யல் ரயில்வே கேட் இன்று முதல் மூடல்.
பராமரிப்பு பணிக்காக நொய்யல் ரயில்வே கேட் இன்று முதல் மூடல். கரூர்- ஈரோடு ரயில்வே வழித்தடத்தில், நொய்யல் ரயில்வே கேட் உள்ளது. அதன் வழியாக திருப்பூர், நாமக்கல், கோவை, ஈரோடு, சேலம்,அரவக்குறிச்சி, க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனைத்து வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில் ரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக நொய்யல் ரயில்வே கேட் இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை மூடப்படுகிறது என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் நொய்யல் குறுக்கு சாலையில் இருந்து காகித ஆலை, வேலாயுதம்பாளையம், வழியாக பரமத்தி வேலூர், நாமக்கல், திருச்செங்கோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் எனவும், அதேபோல அந்த பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் வேலாயுதம்பாளையம், காகிதஆலை, நொய்யல் குறுக்கு சாலை வழியாக அரவக்குறிச்சி,க. பரமத்தி, திருப்பூர், ஈரோடு, கோவை போன்ற ஊர்களுக்கு செல்ல வேண்டுமென அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.
Next Story