கரூர்-அடிக்கடி உட்கொண்ட மாத்திரைகளால் ஏற்பட்ட வயிற்று வலியால் விஷம் குடித்து தற்கொலை செய்த பெண்.

கரூர்-அடிக்கடி உட்கொண்ட மாத்திரைகளால் ஏற்பட்ட வயிற்று வலியால் விஷம் குடித்து தற்கொலை செய்த பெண்.
கரூர்-அடிக்கடி உட்கொண்ட மாத்திரைகளால் ஏற்பட்ட வயிற்று வலியால் விஷம் குடித்து தற்கொலை செய்த பெண். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து ரோடு அருகே உள்ள கருப்பாயி கோவில் தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு மனைவி வரலட்சுமி வயது 39. இவர் குழந்தை பருவத்திலேயே இவருக்கு ஆஸ்மா தொந்தரவு இருந்ததால், தொடர்ந்து மாத்திரைகளை எடுத்து வந்துள்ளார். இதனால் இவருக்கு வயிற்று வலி அவ்வப்போது ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் செப்டம்பர் 23ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணி அளவில் வயிற்று வலி அதிகமானதால் விரக்தி அடைந்த வரலட்சுமி பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த அவரது மகன் மாதேஸ்வரன் வயது 20 என்பவர், தனது தாயாரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த வரலட்சுமி சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 24ஆம் தேதி உயிரிழந்தார். சம்பவம் குறித்து மாதேஸ்வரன் அளித்த புகாரில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த வரலட்சுமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தி, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல்துறையினர்.
Next Story