பெரிய குளத்து பாளையத்தில், மயங்கி விழுந்த கூலித் தொழிலாளி உயிரிழப்பு.

பெரிய குளத்து பாளையத்தில், மயங்கி விழுந்த கூலித் தொழிலாளி உயிரிழப்பு.
பெரிய குளத்து பாளையத்தில், மயங்கி விழுந்த கூலித் தொழிலாளி உயிரிழப்பு. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், சுல்தான்பேட்டை அருகே உள்ள சேடர் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் வயது 55. இவர் கரூர், பெரிய குளத்துப்பாளையம் பகுதியில் செயல்படும் தனியார் டிராக்டர் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். மேலும், கடந்த இரண்டு வருடங்களாகவே அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை மேற்கொண்டும் வந்துள்ளார். இந்நிலையில் செப்டம்பர் 23ஆம் தேதி மதியம் 2 மணி அளவில், தனது நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கினார். உடனே அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த ரவிச்சந்திரனின் மனைவி விசாலாட்சி வயது 43 என்பவர் இது தொடர்பாக அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த ரவிச்சந்திரன் உடலை உடற்கூறு ஆய்வுக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.
Next Story