சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பம் ஆக்கிய வாலிபர்

சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பம் ஆக்கிய வாலிபர்
போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ராஜேந்திரப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் சந்திரவேல் (23). இவர் பெண்ணாடம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தனது உறவினரின் மகளான பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி அவரிடம் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதில் சிறுமி தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் சந்திரவேல் மற்றும் இவருக்கு உடந்தையாக இருந்த இவரது தந்தை வேல்முருகன், தாய் சாந்தி, மற்றும் உறவினர்களான பெண்ணாடம் அருகே உள்ள தாழநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் செந்தில் (38), இவரது மனைவி கௌதமி (34) ஆகிய ஐந்து பேர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story