கரூர் மாவட்டம் கடவூர் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து

கரூர் மாவட்டம்  கடவூர் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து
கரூர் மாவட்டம் கடவூர் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (47). இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் பின்னால் முனியாண்டி என்பவரை அமர வைத்து கொண்டு கடவூர் அருகே தண்ணீர் பந்தல் பிள்ளையார் கோவில் அருகே சென்றுள்ளனர். அப்போது எதிரே அதிவேகமாக வந்த பைக் மோதியதில் பின்னால் அமர்ந்து வந்த முனியாண்டி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். பாலவிடுதி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை செய்கின்றனர்.
Next Story