தற்கொலை செய்த ஐந்து பேர் உடல்கள் புதுகையில் தகனம்!

துயரச் செய்திகள்
புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நமணசமுத்திரம் அருகே நகரத்தாருக்கு சொந்தமான சிவமடம் உள்ளது. இங்கு ஈமக்கிரியை செய்யும் மண் டபமும் உள்ளது. நேற்று முன்தினம் காலை மடத்துக்கு வெளியே கார் ஒன்று நீண்ட நேரமாக நிற்பதை பார்த்த காவலாளி நமணசமுத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பொன்னமராவதி டிஎஸ்பி(பொ) முத்துராஜா தலைமையில் போலீசார் வந்து காரை திறந்து பார்த்தபோது, 2 ஆண்கள், 3 பெண்கள் இறந்த கிடந்தனர். காரில் விஷபாட்டில் ஒன்றும், கடிதமும் கிடந்தன. விசாரணையில், இறந்தவர்கள் சேலம் சூரமங்கலம் ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த மணிகண்டன்(50), அவரது மனைவி நித்யா(48), மகன் தீரன்(20), மகள் நிக ரிகா (17), மணிகண்டனின் தாயார் சரோஜா(70) என்பதும், மணிகண்டன் புதுக்கோட்டை சிப்காட் தொழிற்பேட் டையில் காப்பர் நிறுவனம் நடத்தி வந்ததும் தெரியவந்தது. கடிதத்தில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங் கிய கடனையும் திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் இந்த துயர முடிவை எடுத்துள்ளோம். எங்களது உடல்களை இங்கேயே அடக்கம் செய்துவிடுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையே 5 பேரின் உடல்களும் புதுகை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று காலை உறவினர் சதீஸ் என்பவரிடம் ஒப்படைக்கப்பட் டன.கடிதத்தில் குறிப்பிட்டபடி 5 பேரின் உடல்களும் புதுக்கோட்டை போஸ்நகர் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டன.
Next Story