ஈரோடு மாவட்டத்திலேயே அதிக விலைக்கு விற்பனையான தேங்காய் பருப்பு ஏலம்.

ஈரோடு மாவட்டத்திலேயே அதிக விலைக்கு விற்பனையான தேங்காய் பருப்பு ஏலம்.
ஈரோடு மாவட்டத்திலேயே அதிக விலைக்கு விற்பனையான தேங்காய் பருப்பு ஏலம்.
ஈரோடு மாவட்டத்திலேயே அதிக விலைக்கு விற்பனையான தேங்காய் பருப்பு ஏலம். ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய்பருப்பு ஏலம் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியிலிருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பு கொண்டு வந்தனர். இதில் 17.07 குவிண்டால் எடை கொண்ட 35 மூட்டைகள் தேங்காய்பருப்பு 2,08,486க்கு விற்பனையானது. அதிகபட்சம் ரூ.140.00க்கும், குறைந்தபட்சம் ரூ.102.60க்கும் விற்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இன்று ஈரோடு விற்பனைக்குழு வேளாண்மை துணை இயக்குநர்/ செயலாளர் மற்றும் தாளவாடி விற்பனைக்கூட மேற்பார்வையாளர் தாளவாடி விவசாயிகளிடம் விற்பனைக்கூட செயல்பாடுகள் மற்றும் ஆலோசனைகளை எடுத்துரைத்தனர். இதில் தாளவாடி பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Next Story