எஸ்டிபிஐ சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

எஸ்டிபிஐ சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
எஸ்டிபிஐ சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
எஸ்டிபிஐ சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தொகுதி தலைவர் முகமது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. தொகுதி செயலாளர் முகமது இர்ஃபான் வரவேற்புரையாற்றினார். திருப்பூர் தெற்கு மாவட்ட பொது செயலாளர் மன்சூர் அஹமது, திருப்பூர் தெற்கு மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் மற்றும் எஸ் டி பி ஐ கட்சியின் மாவட்ட தொகுதி நகர கிளை கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையை எஸ் டி பி ஐ கட்சியின் மாவட்ட பேச்சாளர் சேக் அலாவுதீன், மாவட்டத் தலைவர் சஹானா ரஹ்மத்துல்லா, மாவட்ட அவைத் தலைவர் தேமுதிக பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசின் தொடர் மின் கட்டண உயர்வை கண்டித்தும் தேர்தல் வாக்குறுதி படி மாதம்தோறும் மின் கணக்கீட்டு முறையை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் சையது அபுதாஹிர் நன்றியுரை ஆற்றினார். இதில் 30 பெண்கள் உட்பட 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story