மாணவர் சங்கம் மாவட்ட மாநாடு தொடக்கம்!

மாணவர் சங்கம் மாவட்ட மாநாடு தொடக்கம்!
நிகழ்வுகள்
புதுக்கோட்டையில் இந்திய மாணவர் சங்கத்தின் சிறப்பு மாவட்ட மாநாடு, பேரணி, பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்து தொடங்கிய பேரணி, சின்னப்பா பூங்கா பகுதியில் நிறைவடைந்தது. இங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு, மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ. சந்தோஷ்குமார் தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மா. சின்னதுரை, மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலர் கோ. அரவிந்தசாமி,மாநிலச் செயற்குழு உறுப்பினர் ரெ. கார்த்திகாதேவி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ரா. மகாதீர், மாவட்டச் செயலர் சா. ஜனார்த்தனன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக நகரச் செயலர் கே. சந்துரு வரவேற்றார். முடிவில் நகரத் தலைவர் ச, பாவேந்தன் நன்றி கூறினார். தொடர்ந்து சனிக்கிழமை தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலகத்தில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. தமிழகத்தில் மீண்டும் மாணவ பேரவைத் தேர்தல் நடத்த வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தனியார் கல்விதனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சிறப்பு மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Next Story