சிறுபான்மையினர் நலன் காக்கும் அரசாக திமுக அரசு உள்ளது-அருட் தந்தை ஜோ.அருண் கரூரில் பேட்டி.

சிறுபான்மையினர் நலன் காக்கும் அரசாக திமுக அரசு உள்ளது-அருட் தந்தை ஜோ.அருண் கரூரில் பேட்டி.
சிறுபான்மையினர் நலன் காக்கும் அரசாக திமுக அரசு உள்ளது-அருட் தந்தை ஜோ.அருண் கரூரில் பேட்டி. சிறுபான்மையினர் நலன் காக்கும் அரசாக திமுக தலைமையிலான தமிழக அரசு உள்ளது என, மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருட் தந்தை ஜோ.அருண் கரூரில் பேட்டி அளித்தார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருட் தந்தை ஜோ அருண்,கிறிஸ்தவ தேவாலயங்கள் புனரமைக்க தமிழ்நாடு அரசின் மூலம் நிதி உதவிகள் மற்றும் மானியம் வழங்கப்படுகிறது. கிறிஸ்தவர்களின் பயன்பாட்டிற்காக கல்லறை தோட்டம், முஸ்லிம்களின் பயன்பாட்டிற்காக கபர்ஸ்தான் அமைத்தல் போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர்,சிறுபான்மையினர் நலன் காக்கும் அரசாக திமுக தலைமையிலான தமிழக அரசு உள்ளது என்றார்.
Next Story