குடிப்பழக்கத்தால் கணவனை பிரிந்த மனைவி மனைவி பிரிந்த ஏக்கத்தில் கணவன் தற்கொலை

குடிப்பழக்கத்தால் கணவனை பிரிந்த மனைவி மனைவி பிரிந்த ஏக்கத்தில் கணவன் தற்கொலை
குமாரபாளையத்தில் குடிப்பழக்கத்தால் மனைவி, கணவனை பிரிந்து செல்ல,  மனைவி பிரிந்த ஏக்கத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலை, கோணபுல்மேடு பகுதியில் வசிப்பவர் ஆனந்தன், 56. விவசாய கூலி. இவர் குடிப்பழக்கம் உள்ளவர் என்பதால், இவரது மனைவி பூங்கொடி, 42, இவரை விட்டு பிரிந்து விட்டார். இந்த மன வேதனையில் இருந்த வந்த இவர், நேற்றுமுன்தினம் காலை 11:00 மணியளவில் விவசாய தோட்டத்திற்கு அடிக்கும் பூச்சி மருந்து குடித்துள்ளார். இதனால் மயக்கமடைந்த இவரை அக்கம் பக்கத்தினர் சேலம்  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 00.15 மணியளவில் இறந்து விட்டார். இது குறித்து இவரது மனைவிக்கு தகவல் தர, நேரில் வந்த பூங்கொடி, குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து குமாரபாளையம் விசாரணை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு மகள்கள், இரு மகன் உள்ளனர்.
Next Story