விருத்தாசலத்தில் மது பாட்டில் விற்றவர் கைது

விருத்தாசலத்தில் மது பாட்டில் விற்றவர் கைது
25 மது பாட்டில்கள் பறிமுதல்
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் விருத்தாசலம் பாலக்கரையில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலக்கரை அருகே அரசு டாஸ்மாக் மது பாட்டில்களை திருட்டுத்தனமாக வைத்துக் கொண்டு விற்பனை செய்து கொண்டிருந்த சாத்துக்குடல் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் (65) என்பவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 25 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story