விருத்தாசலம் தனியார் பள்ளியில் ஆர் எஸ் எஸ் சாகா பயிற்சி முகாம் நடத்துவதை தடுத்து நிறுத்த கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

விருத்தாசலம் தனியார்  பள்ளியில்  ஆர் எஸ் எஸ் சாகா பயிற்சி முகாம் நடத்துவதை தடுத்து நிறுத்த கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு
பேரணியாக சென்றதால் பரபரப்பு
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆர் எஸ் எஸ் அமைப்பு நடத்தும், ப்ராரம்பிக் வர்க பண்புப்(சாகா) பயிற்சி முகாம் நேற்று முதல் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந் நிலையில்,பள்ளியில் ஆர் எஸ் எஸ் அமைப்பு நடத்தும் சாகா பயிற்சி முகாமை தடுத்து நிறுத்த கோரியும், பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் விடுதலை, விசிக, மக்கள் அதிகாரம், சிபிஎம்எல் உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் விருத்தாசலம் ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தத்தில் இருந்து, முழக்கமிட்டபடி, விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று கோட்டாட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர். தொடர்ந்து விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியா சக்தியை சந்தித்து மனு கொடுத்தனர்.
Next Story