போதைக்கு எதிரான இரு சக்கர வாகன பேரணி

போதைக்கு எதிரான இரு சக்கர வாகன பேரணி
பேரணி
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரில், மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி நடத்தும் போதைக்கு எதிரான இரு சக்கர வாகன பேரணி நேற்று நடைபெற்றது, இந்தப் பேரணி மமக மாவட்ட தலைவர் பசல் முஹம்மது தலைமையில், தொழிலதிபர் M.S.கோத்தம்சந்த் துவங்கி வைத்தார் .சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாநில செயலாளர் மு.யா.முஸ்தாக்தீன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் A.V.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாவட்ட பொருளாளர் எஸ்.பி.ஜஹாங்கீர் மாவட்ட இளைஞரணி செயலாளர் இப்ராஹிம் மாவட்ட இளைஞரணி பொருளாளர் ஜமால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை திருக்கோவிலூர் நகர மனிதநேய மக்கள் கட்சி . செய்திருந்தனர்.
Next Story