உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதை பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுகவினர்!

மடத்துக்குளம்
தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை பொறுப்பேற்க உள்ள நிலையில் அதனை கொண்டாடும் விதமாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் நால்ரோடு பகுதி மற்றும் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் திமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். மேலும் "துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்க" என்ற கோஷங்களை எழுப்பினர். பேருந்தில் பயணித்தவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் திரளான திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story