லோடுமேன் விஷம் குடித்து தற்கொலை!

லோடுமேன் விஷம் குடித்து தற்கொலை!
தூத்துக்குடி அருகே குடும்ப பிரச்சனையில் லோடுமேன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி அருகே குடும்ப பிரச்சனையில் லோடுமேன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் பழனிச்சாமி (50), லோடுமேன் ஆகவேலை பார்த்து வருகிறார். இவர் சரியாக வேலைக்கு செல்லாததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன வேதனையடைந்த பழனிச்சாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வின்சென்ட் அன்பரசி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story