ரவுடி இர்ஃபான் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் முகம் சிதைக்கப்பட்டு வெட்டி படுகொலை

ரவுடி இர்ஃபான் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் முகம் சிதைக்கப்பட்டு வெட்டி படுகொலை
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே பேகம்பூரை சேர்ந்த ரவுடி இர்ஃபான் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் முகம் சிதைக்கப்பட்டு வெட்டி படுகொலை ஒருவர் படுகாயம் மருத்துவமனையில் அனுமதி போலீசார் விசாரணை பரபரப்பு
திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேர்ந்த ரவுடி இர்ஃபான் இவர் தனது நண்பர் முகமது அப்துல்லா உடன் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஸ்பென்சர் காம்பவுண்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது இவர்களை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேற்று இரவு இருவரையும் சரமாரி வெட்டியுள்ளனர். இதில் இர்ஃபான் முகம் சிதைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முகமது அப்துல்லா அங்கிருந்து தப்பி உயிர் பிழைத்தார். பின்னர் காவல்துறையினர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் இர்பானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் படுகொலை குறித்த விபரம் கேட்டறிந்தார். படுகொலை செய்யப்பட்ட இர்ஃபான் மீது கொலை உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. குறிப்பாக கடந்த சில மாதத்திற்கு முன்பு திமுகவை சேர்ந்த பட்டறை சரவணன் படுகொலையில் இர்ஃபான் முக்கிய குற்றவாளி ஆவார். இது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Next Story