விசிக சார்பில் பொதுமக்களிடம் துண்டு அறிக்கை வழங்கல்

மகளிர் மாநாடு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்
மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டை ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கடைவீதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் துண்டறிக்கை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பொ.மகாமுனி என்கிற வன்னியரசு தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் பேரூர் செயலாளர் இரா.உதயநிதி முன்னிலையில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி 13 ஆவது வார்டு கிளைச் செயலாளர் பா.பார்த்திபன், குளித்தலை தொகுதி செயலாளர் செ.சுதாகர், வீரமணி , கிருஷ்ணமூர்த்தி, சேங்கல் பூபதி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டறிக்கைகளை வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர்.
Next Story