முன்னாள் நகரமன்ற தலைவருக்கு அனைத்து கட்சியினர் மலரஞ்சலி

முன்னாள் நகரமன்ற தலைவருக்கு அனைத்து கட்சியினர் மலரஞ்சலி
குமாரபாளையம் முன்னாள் நகரமன்ற தலைவருக்கு அனைத்து கட்சியினர் மலரஞ்சலி செலுத்தினர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அ.தி.மு.க. வை சேர்ந்த குமாரபாளையம் நகராட்சி முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவசக்தி தனசேகரன் உடல்நிலை சரியில்லாமல் நேற்று அதிகாலை 03:20 மணியளவில் இறந்தார். இவரது உடலுக்கு முன்னாள் அமைச்சரின் புதல்வர் தரணிதரன் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று நேரில் அஞ்சலி செலுத்தினர். இவரது இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
Next Story