தேவேந்திர குல வேளாளர் சங்கம் சார்பில் பரிசளிப்பு விழா

தேவேந்திர குல வேளாளர் சங்கம் சார்பில் பரிசளிப்பு விழா
மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு தேவேந்திர குல வேளாளர் சங்கம் சார்பில் பரிசளிப்பு விழா நடைபெற்றது
திண்டுக்கல் தனியார் ஹாலில் தேவேந்திர குல வெள்ளாளர் சங்கம் சார்பில் 28 வது ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா சங்கத் தலைவர் உமா மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மருத்துவர் ஈஸ்வர குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதை தொடர்ந்து பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியருக்கு ரொக்கப் பரிசு மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டன. நீட் தேர்வில் வெற்றி பெற்று தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவிக்கும், சிறந்த ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களையும் பாராட்டி கௌரிவித்தனர். மேலும் பள்ளி கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய 150 க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள். செயலாளர் மாரி குமார் கண்காணிப்பாளர் மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
Next Story