வேலூர் அருகே மர்மமான முறையில் பெண் பலி.

வேலூர் அருகே மர்மமான முறையில் பெண் பலி.
வேலூர் அருகே மர்மமான முறையில் பெண் பலி கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை.
பரமத்திவேலூர், செப்.29- நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள பொய்யேரியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி ராகவி (29). கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக ராகவி தனது கணவரை விட்டு பிரிந்து பரமத்திவேலுார் அருகே உள்ள பொய்யேரியில் உள்ள தனது பொற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.‌ இவருக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை ராகவி வீட்டிற்கு அருகே‌ இறந்து கிடந்ததை சிலர் பார்த்துள்ளனர். பின்னர் இது‌ குறித்து ராகவியின் பெற்றோர் மற்றும் வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் தரப்பில் ராகவி விஷம் குடித்து இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் ராகவி கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story