ஊத்தங்கரை அருகே தூக்கிட்ட நிலையில் முதியவர் சடலம் கொலையா தற்கொலையா போலீஸ் விசாரணை

ஊத்தங்கரை அருகே தூக்கிட்ட நிலையில் முதியவர் சடலம் கொலையா தற்கொலையா போலீஸ் விசாரணை.
ஊத்தங்கரை அருகே தூக்கிட்ட நிலையில் முதியவர் சடலம் கொலையா தற்கொலையா போலீஸ் விசாரணை. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி வயது 65 கூலி வேலை செய்து வருகிறார்.   இந்த நிலையில்  இந்திரா நகர் பகுதியில் அவருக்கு சொந்தமான முனியப்பன் கோயிலின் உள் பகுதியில் உள்ள கோவில் மணியில் கட்டப்பட்ட கயிற்றில் மர தூணில் தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடந்தார். கோவில் அருகில் குடியிருப்பவர்கள் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த டிஎஸ்பி சீனிவாசன், காவல் ஆய்வாளர் முருகன், காவலர்கள் சடலத்தை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.   மேலும் அவர் தூக்கிட்ட இடத்தில் ரத்தம் கசிந்து இருந்ததாலும் அவரது உடலில் காயங்கள் இருந்ததாலும் இது கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் ஊத்தங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விசாரணையில் இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இவருக்கு முரளி என்ற மகனும் சித்ரா என்ற மகளும் உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சக தொழிலாளர்களுடன் வெளியூர் சென்று வேலை செய்துவிட்டு வந்தவர் இன்று மர்மமான முறையில் தூக்கில் தொங்கியவாறு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story