கூட்டுறவு சங்கங்களில் நிதி பற்றாக்குறை தவிப்பில் விவசாயிகள்

கூட்டுறவு சங்கங்களில் நிதி பற்றாக்குறை தவிப்பில் விவசாயிகள்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 200க்கு மேற்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இவற்றில் சில சங்கங்களை தவிர மற்றவை நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களுக்கான அரசு நிதி உதவி திரும்ப கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் கடன் சங்கங்களில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய பயனாளிகளுக்கு கடன் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களில் ஆடு, மாடுகளுக்காக கடன் பெற்றவர்கள் கடனை திருப்பி செலுத்தியும் மீண்டும் கடன் பெற முடியாத நிலையில் தவிக்கின்றனர். கூட்டுறவு கடன் சங்கங்களில் விசாரித்த போது நிதி பற்றாக்குறை நிலவுவதால் ஏற்கனவே கடன் பெற்ற பயனாளிகள் கடனை செலுத்தி மீண்டும் பெறுவதற்கு தடை ஏதும் இல்லை. புதிய பயனாளிகள் கடன் கேட்டால் மட்டுமே நிறுத்தி வைக்க வேண்டுமென வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
Next Story